Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மைனாரிட்டி அரசு அமைந்து.. முதல்முறை இப்படி.. முக்கிய விஷயத்தில் பின்வாங்கும் மோடி.. என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் மைனாரிட்டி அரசு அமைந்த நிலையில் இனி மத்திய என்டிஏ அரசு எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முடிவுகளை எடுக்க முடியாது. சில விஷயங்களில் பின்வாங்க வேண்டி இருக்கும். அப்படிதான் முக்கியமான விஷயம் ஒன்றில் மத்திய அரசு பின்வாங்க உள்ளதாம்.

முன்னதாக 5 மாநில தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு முன் விவசாய சட்டங்களை பாஜக கைவிட்டது. தற்போது பாஜக தனி மெஜாரிட்டி இல்லாமல் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்தின் உதவியோடு ஆட்சியில் அமர்ந்து உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரிக்கை வைத்தன.

agni path

இரண்டு கட்சிகளுமே அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னி வீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.

அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

லோக்சபா தேர்தல்: மொத்தம் 45 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு வயது வரம்பு 17.5 - 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 வருடங்கள் கழித்து இந்த வீரர்களில் 25 சதவிகிதம் பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் ஆபிசர் அல்லாத ரேங்கில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டம் பீகார், உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சிக்கே எதிராக திரும்பியது. இதை ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய விதம் பாஜகவிற்கு பெரிய சவுக்கடியாக் அமைந்தது. உத்தர பிரதேசத்தில் பாஜக வீழ்ச்சி அடையவும் இது முக்கிய காரணமாக மாறியது.

மாற்றம்: இந்த நிலையில்தான் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளமும் இந்த திட்டத்தை எதிர்த்து உள்ளன. மத்தியில் மைனாரிட்டி அரசு அமைந்த நிலையில் இனி மத்திய என்டிஏ அரசு எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முடிவுகளை எடுக்க முடியாது. சில விஷயங்களில் பின்வாங்க வேண்டி இருக்கும். அப்படிதான் அக்னி பாத் விஷயத்திலும் மத்திய அரசு பின்வாங்க உள்ளதாம்.

அதன்படி பாஜக தலைமையிலான NDA அரசாங்கம், குறைந்தபட்சம் 10 அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து, திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை இளம் வயதினருக்கு அதிக லாபம் மற்றும் வெகுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் குறுகிய கால ஆட்சேர்ப்பு திட்டத்தை மேலும் பயன் உள்ளதாக மாற்றுவது குறித்து செயலாளர்கள் குழு தங்களது பரிந்துரைகளை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய பின் பிரதமர் நரேந்திர மோடியிடம், செயலாளர்கள் குழு இறுதி விளக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 17 அல்லது 18 ஆம் தேதி பிரதமர் முன் விரிவான விளக்கத்தை அளிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+