இயேசு கிறிஸ்துவின் தைரியமும், சத்தியமும்.. மறக்காமல் கடைபிடிப்போம்.. மோடியின் புனித வெள்ளி வாழ்த்து
கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார்
டெல்லி: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் புனித வெள்ளி வாழ்த்தினை பதிவிட்டு உள்ளார். இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்!
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடி வருகின்றனர்... இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக நினைவு கூறுவார்கள். இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமானது இந்த நாள்.. இயேசு உயிர்த்தெழுந்த ஞாற்றுக்கிழமை ஈஸ்டர் கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமைகளில் இது நிகழும். அதனால் சர்ச்-களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கும்.
இந்த புனித வெள்ளியை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்த புனித வெள்ளி அன்று, நாம் அமைதி, சக மனிதர்களிடம் இரக்கம் மற்றும் சுய தியாகத்தின் ஆவி ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவோம்" என்று கூறி புனித வெள்ளி வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரதமர் மோடியும் புனித வெள்ளி வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.. அதில், "இயேசு கிறிஸ்து மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்... அவரது தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை... சமூகத்தில் அநீதி, வலி, துக்கங்களை அகற்றியவர்.. அவரது நேர்மையுணர்வும் தனித்தன்மை வாய்ந்தது.. புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை மற்றும் நீதிக்கான அவரது உறுதிப்பாட்டையும் நாம் நினைவில் கொள்வோம் "என கேட்டு கொண்டுள்ளார்.

இந்திய பிரதமர் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை.. அனைத்து மத, கலாச்சார நிகழ்வுகளுக்கும் வாழ்த்து கூறுவது அவரது கடமை என்றாலும் இயேசு கிறிஸ்துவின் தைரியமும், நீதியும் தனித்து நிற்பவை என பிரதமர் மோடி வாழ்த்து சொல்லிய ட்வீட் அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications