தமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
பெரும்பாலான தமிழர்கள் சித்திரை 1-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகிறார்கள். கேரளாவில் நாளை விஷு கொண்டாடப்படுகிறது. இதே போல் நாடு முழுக்க பல மாநிலங்களில் இன்று புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் தமிழ்ப்புத்தாண்டு தை 1 என்று இருந்தது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1 என்று மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தமிழக மக்கள் இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை பறைசாற்றுகின்ற வகையில் இந்த கொண்டாட்டங்கள் எப்போதும் அமையும்.
மோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ
தற்போது நாடு முழுக்க தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடும் தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Dear Tamil sisters and brothers,
— Chowkidar Narendra Modi (@narendramodi) 14 April 2019
Praying for a wonderful year ahead. pic.twitter.com/NXZ3WkXsL0
இதே நாளில் புத்தாண்டு கொண்டாடும் பிற மாநில மக்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.