ஜி 20 மாநாடு: உலக தலைவர்களுடன் அடுத்தடுத்து மோடி சந்திப்பு, ஆலோசனை.. பரபரப்பாக நடந்து முடிந்த மாநாடு
டெல்லி: வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா ஏற்று நடத்தியது. டெல்லியில் இரண்டு நாட்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வல்லரசுகள் மற்றும் வளரும் நாடுகள் என உலகின் முக்கியமான நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் தலைமையை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20-மாநாடு இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. ஜி-20 அமைப்பின் தலைவர் என்ற முறையில், இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் பொறுப்பாகும்.

எனவே, இதற்காக கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு தயாராகி வந்தது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் தேர்வு செய்யப்பட்டது. அரங்கம் மட்டுமின்றி தலைநகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த சில நாட்களாகவே டெல்லியில் திரண்டனர்.
முதல் நாளான நேற்று தீர்மானங்களும் பிரகடனமும் வெளியிடப்பட்டது. இன்றும் ஜி 20 மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்தடுத்து பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கேமரூன், துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, ஐரோப்பிய யூனியன்/ ஐரோப்பிய கவுன்சில், பிரேசில் மற்றும் நைஜீரியா நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
பின்னர் நிறைவுரை ஆற்றிய பிரதமர் மோடி, "சிறந்த எதிர்காலத்தை நோக்கி உலகை கொண்டு செல்வதற்கு சர்வதேச அமைப்புகள் அனைத்தும் தற்போதைய நிதர்சனங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டியது அவசியம். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கு உதாரணமாக கூட சொல்லலாம். ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்ட போது உலகம் இன்று இருப்பதை போல முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
அப்போது வெறும் 51 நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருந்தது. ஆனால், தற்போது 200 நாடுகள் இருக்கின்றன. அப்படியிருந்தும் ஐக்கிய நாடுகள் அவை பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தது போலத்தான் இப்போதும் உள்ளது. உலகம் மாறிவிட்டது. மாற்றத்திற்கு ஏற்ப அனைத்து துறைகளிலும் பிரதிபலிக்க வேண்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications