2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்.. பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் !
டெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு 6ஜி சேவையை தொடங்கமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 25 ஆம் ஆண்டு தொடக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி அலைக்கற்றை சோதனையை தொடக்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில் 8 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2 ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.

3ஜி டூ 4ஜி
3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது 5 ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் பங்காற்றும்.

5ஜி தொழில்நுட்பம்
5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

10 ஆண்டுகளில் 6ஜி
அடுத்த 10 ஆண்டுகளில் நாம் 6ஜி சேவையை தொடங்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செல்போன் தயாரிக்கும் ஆலைகள் 2 லிருந்து 200 ஆக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு மையமாக இந்தியா விளங்குகிறது.

5ஜி தொழில்நுட்பம் ரூ 220 கோடி
இந்தியாவில் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணம் கிடைக்கிறது. 5 ஜி தொழில்நுட்பமானது 220 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி சென்னை, ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் உள்ளிட்டவை கலந்து கொண்டன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications