2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்.. பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் !
டெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு 6ஜி சேவையை தொடங்கமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 25 ஆம் ஆண்டு தொடக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி அலைக்கற்றை சோதனையை தொடக்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில் 8 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2 ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.

3ஜி டூ 4ஜி
3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது 5 ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் பங்காற்றும்.

5ஜி தொழில்நுட்பம்
5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

10 ஆண்டுகளில் 6ஜி
அடுத்த 10 ஆண்டுகளில் நாம் 6ஜி சேவையை தொடங்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செல்போன் தயாரிக்கும் ஆலைகள் 2 லிருந்து 200 ஆக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு மையமாக இந்தியா விளங்குகிறது.

5ஜி தொழில்நுட்பம் ரூ 220 கோடி
இந்தியாவில் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணம் கிடைக்கிறது. 5 ஜி தொழில்நுட்பமானது 220 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி சென்னை, ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் உள்ளிட்டவை கலந்து கொண்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications