சுத்து சுத்துனு சுத்துதே! இஸ்ரேல் - ஈரான் மோதலால் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்துக்கு சிக்கல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்ட பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தான் இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பறப்பதற்கு பெரிய சிக்கல் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடியின் விமானம் வழக்கத்தை விட கூடுதல் நேரம் வானிலேயே சுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி - 7' அமைப்பு. இந்த அமைப்பின் உச்சி மாநாடு கனடாவில் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. கனடாவின் கனனாஸ்கிஸ் நகரில் இன்று முதல் 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளார். இன்று காலை 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ‛ஏர் இந்தியா ஒன்' சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு புறப்பட்டார்.
இன்று அவர் முதலில் சைப்ரஸ் நாட்டுக்கு செல்வார். அதன்பிறகு கனடா சென்று ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிறகு குரேஷியா நாட்டுக்கு செல்வார். அங்கிருந்து நாளை கனடா சென்று ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். கனடாவில் நாளை, நாளை மறுநாள் நடக்கும் ஜி 7 மாநாட்டில் பங்கேற்பார். அதன்பிறகு அங்கிருந்து குரேஷியா சென்று இருநாடுகள் இடையேயான உறவு, வர்த்தகம் பற்றி பேச உள்ளார்.
இதற்கிடையே தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் பிரதமர் மோடியின் பயணத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது இன்று பிரதமர் மோடி சைப்ரஸ் நாட்டுக்கு செல்ல உள்ளார். இந்த நாடு மத்திய கிழக்கு நாடாகும். தற்போது அந்த பிராந்தியத்தில் தான் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் மோதி வருகின்றன. இந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான், ஈரான், ஈராக்,சிரியா, லெபனான், இஸ்ரேல் வான்வெளி பரப்புகளை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் தற்போது அந்த வான்வெளி பரப்பில் தான் ஈரானும், இஸ்ரேலும் ஏவுகணைகளை ஏவி மாறிமாறி தாக்கி வருகின்றன. இதனால் அந்த வான்வெளி பரப்பை பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' சிறப்பு விமானம் பயன்படுத்த முடியாது. மேலும் ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் தங்கிளன் வான்வெளி பரப்புகளை நிறுத்தி உள்ளன. அதேபோல் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையால் பாகிஸ்தான் வான்வெளி பரப்பை பயன்படுத்த நம் நாட்டின் விமானங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் மாற்று வான்வெளி பரப்பில் பறக்க வேண்டிய சூழல்ஏற்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஜோர்டான் வான்வெளி பரப்பை பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த வான்வெளி பரப்பையும் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. இதனால் பிரதமர் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பின் பாதுகாப்பான வான்வெளி பரப்பை தேர்வு செய்து பிரதமர் மோடி ‛ஏர் இந்தியா ஒன்' விமானத்தில் சைப்ரஸ் நாட்டுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக சைப்ரஸ் நாட்டுக்கு நம் நாட்டில் இருந்து செல்ல வேண்டும் என்றால் 8 முதல் 9 மணிநேரம் எடுக்கும். ஆனால் தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக கூடுதல் நேரம் பிரதமர் மோடி விமான பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சைப்ரஸ் நாட்டில் இருந்து கனடாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார். அங்கிருந்து செல்வதிலும் சிக்கல் உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான மோதல் காரணமாக மாற்று வான்வெளி பரப்பில் மோடியின் ‛ஏர் இந்தியா ஒன்' விமானம் பயணிக்க உள்ளது.












Click it and Unblock the Notifications