Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் இல்லம் அருகே உள்ள.. குடிசைகளை காலி செய்ய உத்தரவு! 717 குடும்பங்களுக்கு சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புது டெல்லியின் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடிசைவாசிகள், மார்ச் 6ம் தேதிக்குள் அங்கிருந்து காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த பகுதியில் பிரதமர் இல்லம் இருப்பதால், இது பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

டெல்லியில் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலைப் பகுதியில் இருக்கும் பாய் ராம் முகாம், மஸ்ஜித் முகாம் மற்றும் டி.ஐ.டி முகாம்வாசிகள் அனைவரும் மார்ச் 6-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தனது அறிவிப்பில் எச்சரித்துள்ளது.

PM s New Residence Project

அரசு நிலத்தில் வசிக்கும் இந்த முகாம்வாசிகளுக்கு, வடமேற்கு டெல்லியின் சவ்தா கேவரா பகுதியில், அதாவது இப்போது வசிக்கும் இடத்திலிருந்து 46 கி.மீ தள்ளி உள்ள இடத்தில் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பாளர்களின் தகுதியை உறுதி செய்வதற்காக, 2024ம் ஆண்டு டெல்லி மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து ஒரு கூட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. DUSIB கொள்கையின் கீழ், தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கு சவ்தா கேவரா DUSIB காலனியில் 717 மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்ச் 6-ஆம் தேதிக்குள் இந்த புதிய குடியிருப்புகளைப் பெற்றுக்கொண்டு முகாம்களை காலி செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தகுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்களுக்கு 717 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு உறுதியான மாற்று வீடுகளை வழங்கியதால் பல குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

டெல்லியின் உயர் பாதுகாப்பு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள அரசு நிலங்களை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. முக்கிய அரசு மற்றும் அதிகாரப்பூர்வ குடியிருப்புகளைக் கொண்ட ரேஸ் கோர்ஸ் சாலை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுவதால், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வெளியேற்றத்தால் மக்கள் இடப்பெயர்வு மற்றும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன. விளக்கம் மற்றும் நிவாரணம் கோரி மக்கள் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளை அணுகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அக்டோபர் 29, 2025 அன்று வெளியேற்ற அறிவிப்புகள் வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் 13, 2025 அன்று டெல்லி உயர் நீதிமன்றமும் உரிய செயல்முறைகளைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+