இது லிஸ்ட்லயே இல்லையே! விரைவில் வரும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம்! மத்திய அமைச்சர் பரபர தகவல்
டெல்லி: இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பிரஹலாத் சிங் படேல் அமைச்சராக உள்ளார். இவர் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறையை நிர்வகித்து வருகிறார்.
இவர் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் 'கரிப் கல்யாண் சம்மேளன்' நிகழ்ச்சில் பங்கேற்றார்.

விரைவில் சட்டம்
அப்போது மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறுகையில், ‛‛இந்த சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். கவலைப்பட வேண்டாம். இந்தியாவில் வலுவான மற்றும் பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இதுவும் நடைமுறைக்கு வரும்'' என்றார்.

மத்திய அரசின் தாரக மந்திரம்
மேலும் அவரிடம் மத்திய அரசின் 8 ஆண்டுகால ஆட்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛சேவை, மக்கள் நலன், ஊழல் இல்லா நிர்வாகிகள், ஏழைகளின் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதுதான் மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது'' என்றார். முன்னதாக அவர் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் இந்தியா
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அதன்படி சீனாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 140யை தொட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்தியா-சீனா இடையே மிகக்குறைந்த அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு முதலிடம் வாய்ப்பு
இதனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications