யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
டெல்லி: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 3 நாட்களாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். நான்காவது நாளாக இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று தனியார் தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது. பல்வேறு முக்கியமான துறைகளில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். சுரங்க மற்றும் நிலக்கரி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்.
மேலும் 6 விமான நிலையங்கள் ஏலம் விடப்படும்.. விமானங்களின் பயண நேரத்தை குறைக்க நடவடிக்கை- நிர்மலா
விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகம் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படும். இதன் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகள் வழங்கப்படும்.
சேவைகள் விரைவாக அனைத்து பகுதிகளுக்கும் இதன் மூலம் வழங்கப்படும். அதே சமயம் தனியார் வழங்கும் இந்த சேவையில் குறைகள் இருந்தால் மின் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். மின் வினியோக நிறுவனங்களுக்காக புதிய கட்டண கொள்கை உருவாக்கப்படும். இதற்கான வரி விதிப்பு முறைகள் கொண்டு வரப்படும்.