Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இல.கணேசன் மறைவால்.. மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உத்தரவிட்டுள்ளார்.

President Murmu Assigns Manipur Governor Ajay Kumar Bhalla Additional Charge of Nagaland

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 15) மாலை காலமானார்.

மறைந்த இல.கணேசனின் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின், சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் இன்று (ஆகஸ்ட் 16) தகனம் செய்யப்பட்டது.

நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பைக் கவனிக்க குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

"நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் மறைவைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை, கூடுதலாக, நாகாலாந்து ஆளுநரின் பணிகளைச் செய்ய நியமித்துள்ளார்" என்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+