Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எக்ஸ் தள பக்கத்தில் டிபியை மாற்றிய பிரதமர் மோடி.. வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது புகைப்படத்தை நீக்கிவிட்டு, தேசியக் கொடியை பிரதமர் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் 78 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நாட்டு மக்கள் மத்தியில் பிரமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். சுதந்திர தின பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Flag Narendramodi

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆயத்தப் பணிகள் பரபரப்பாகத் தொடங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளம், இன்ஸ்டா, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் தனது முகப்பு படத்தை மாற்றி தேசியக் கொடியை டிபியாக வைத்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் உள்ள தனது முகப்புப் படத்தை நீக்கிவிட்டு தேசியக் கொடியை வைத்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த ஆண்டு சுதந்திர தினம் நெருங்கி வருகிறது. எனவே, ஹர் கர் திரங்கா என்பதை மறக்க முடியாத மக்களுக்கான இயக்கமாக மீண்டும் மாற்றுவோம். நான் எனது முகப்புப் படத்தை மாற்றுகிறேன். இதன் மூலம் நமது தேசியக் கொடியை கொண்டாடுவதில் என்னுடன் அனைவரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். உங்கள் செல்ஃபிக்களை https://harghartiranga.com இல் பகிருங்கள் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹர் கர் திரங்கா..என்பது அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி என்பதாகும். ஆசாதி கா அம்ரித் மாஹோத்சவ்.. என்பது சுதந்திரத்தின் ஆற்றல் அமுதம். இந்திய மக்கள் நமது தேசியக் கொடியை அவர்களது வீடுகளுக்கு கொண்டு வரவும், இந்தியாவின் 78 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையிலும் ஊக்குவிக்கும் ஒரு பிரசாரம் ஆகும். எனவே, இந்த ஆண்டும் இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+