அவர் பயன்படுத்தியது.. காங்கிரஸ் அலுவலகத்தில் பிரியங்காவிற்கு அறை ரெடி.. என்ன ஸ்பெஷல் தெரியுமா!
தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு இதனால் புதிய பலம் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இவரின் அரசியல் வருகையை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இது தேர்தல் முடிவில் எதிரொலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரியங்கா முழுதாக அரசியலில் இறங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
முழுதாக அரசியல்
தற்போது பிரியங்கா காந்தி அமெரிக்காவில் இருக்கிறார். வரும் திங்கள் கிழமை அவர் காங்கிரஸ் அலுவலகம் வர உள்ளார். அதன்பின் உத்தர பிரதேசத்தில் கும்ப மேளாவில் தரிசனம் செய்துவிட்டு, கங்கையில் நீராடிவிட்டு பின் தேர்தல் பணிகளை தொடங்க இருக்கிறார்.
புதிய அறை அளித்துள்ளனர்
தற்போது பிரியங்கா காந்திக்கு டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதிய அறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. முதல்முறை பிரியங்கா காந்திக்கு இப்படி அறை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியின் அறைக்கு அருகிலேயே இவருக்கு அறை அளிக்கப்பட்டு உள்ளது.
யார் இடம்
இந்த இடத்தில் இதற்கு முன் தங்கி இருந்தது வேறு யாரும் இல்லை, அது ராகுல் காந்திதான். 2016ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். அதுவரை அவர் இந்த அறையைத்தான் பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்பொலிவு
காங்கிரஸ் தலைமை அலுவலகம் நேரு பவன் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரியங்காவின் வரவை அடுத்து மொத்த அலுவலகமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. திங்கள் கிழமை அவர் அலுவலகம் வருவதை காங்கிரஸ் கட்சியினர் பெரிய விழாவாக கொண்டாட இருக்கிறார்கள் என்கிறார்கள்.