வெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா?.. இதுதான் இந்திய கலாச்சாரமா?.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்
டெல்லி: வெடிமருந்துகளை யானைக்கு கொடுத்து கொல்வது இந்திய கலாச்சாரம் இல்லை என்றும் கேரளாவில் கருவுற்ற யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கேரள மாநிலம் மணப்புரத்தில் கருவுற்ற யானை ஒன்று வனப்பகுதிக்கும் கிராமப் பகுதிக்கும் இடையே உணவுக்காக சுற்றி வந்தது. 20 நாட்களுக்கு முன்னர் பழங்களை சாப்பிட்ட அந்த யானை உணவில்லாமல் கிராமத்தை நோக்கி வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த யானையை அங்கிருந்து விரட்டுவதற்காக அன்னாசி பழத்தில் வெடிமருந்துகளை மறைத்துவைத்து கிராம மக்கள் கொடுத்தனர். அப்போது அந்த பசிக் கொடுமையால் ஆசையாக அந்த பழத்தை வாங்கி வாயினுள் போட்ட அந்த யானைக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தாடை கிழிந்தது
வாயில் போட்டவுடன் வெடிமருந்துகள் வெடிக்கத் தொடங்கின. அப்போது அதன் தாடை கிழிந்தது. இதனால் தாள முடியாத வலியால் யானை துடித்தது. இதனால் உணவு உட்கொள்ள முடியாமல் வலியாலும் தன் வயிற்றில் உள்ள குட்டி பட்டினி கிடக்கும் வேதனையாலும் அந்த யானை சுற்றி வந்தது. பின்னர் வலி தாள முடியாமல் வெள்ளியாறுக்கு சென்ற அந்த யானை தனது வாய், தும்பிக்கை மூழ்கும்படி நின்றது.

பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானையை மீட்க இரு ஆண் யானைகளை கொண்டு வந்தனர். அந்த யானைகள் நீரில் இறங்கிய போது உடனே அந்த பெண் யானை இறந்துவிட்டது. இதை பார்த்து ஆண் யானைகளும் கண்ணீர் விட்டன. இதையடுத்து அந்த யானையை பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோதுதான் அது ஒரு மாதம் கருவுற்றிருந்ததும், அடுத்த 20 மாதங்களில் அழகான குட்டியை ஈன்றிருக்க இருப்பதும் தெரியவந்தது.

சமூகவலைதளங்கள்
இது போல் ஈவு இரக்கமில்லாமல் யானையை விரட்டுவதற்காக வெடிமருந்தை வைத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. வலியால் தாள முடியாமல் போனாலும் எந்த ஒரு மனிதரையும் காயப்படுத்தாமல் அந்த யானை இறந்தது சமூக வலைதளங்களில் வேதனை தெரிவிக்கப்பட்டது.
|
ட்விட்டரில் கண்டனம்
இதுகுறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டரில் கூறுகையில் மலப்புரத்தில் யானையை கொன்றதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். எந்த குற்றவாளியும் தப்பமுடியாது. ஒரு யானைக்கு பட்டாசுகளை கொடுத்து கொல்வது நமது இந்திய கலாச்சாரம் இல்லை என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications