போராட்டகளத்தில் மிகப்பெரிய மேடை... அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்!
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நாளை மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்த தீவிரமாக உள்ளனர்.
போராட்டகளத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையை விட நான்கு மடங்கு பெரிதான மிகப்பெரிய மேடையை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரையில் போராட்டம் வாபஸ் இல்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், அடுத்தகட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரியானா-டெல்லி சிங்கு எல்லையில் போராட்டகளத்தில் மிகப்பெரிய மேடை ஒன்றை விவசாயிகள் அமைத்துள்ளனர். ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மேடையை விட இந்த மேடை நான்கு மடங்கு பெரியதாகும். போராட்டத்தில் பங்கேற்க தற்போது அதிகமான மக்கள் வருகிறார்கள் என்றும், முன்பு இருந்த மேடை அதிகமான மக்களை தங்க வைக்க போதுமானதாக இல்லை. எனவே இந்த பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.
விவசாயிகள் சங்க தலைவர்கள் உரை நிகழ்த்தவும் இந்த மேடை பயன்படுத்தப்படும். மேலும் மாலையில் இசை நிகழ்ச்சிக்கும் இந்த மேடை பயன்படுத்தப்படும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர். பாரதிய கிசான் யூனியனின் பொதுச்செயலாளர் சத்னம் சிங் சாஹ்னி கூறுகையில், நாளை அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு அரசிடம் கோரிக்கை விடுப்போம். அதற்கு அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த போராட்டம் மேலும் தொடரும் என்றார் அவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications