Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலை வாய்ப்பு இடஒதுக்கீட்டில் முறைகேடு... ஓஎன்ஜிசிக்கு ஷோ காஸ் நோட்டீஸ்!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து இருப்பதாக மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு (ஓஎன்ஜிசி) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Recommended Video

    3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சோனு சூட்!

    கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஓஎன்ஜிசிக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் நோட்டீஸ் அனுப்பி, இதன் மறுஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, முறைகேட்டை விளக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. என்.சி.சி.சி தொகுத்த தகவலின்படி, ஓ.என்.ஜி.சி 1993 முதல் இடஒதுக்கீட்டின்படி ஊழியர்களை நியமிக்கவில்லை. மேலும், ஆட்சேபித்த ஓபிசி வகுப்பு ஊழியர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

    quota violation in ONGC: National Commission for Backward Classes sends notice

    மீண்டும் அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விளக்கத்தை ஓஎன்ஜிசி பொதுத்துறை நிறுவனம் வரும் திங்கள் கிழமை அளிக்கும் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இறுதியாக வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி காலை 11.30 மணிக்கு கமிஷன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓஎன்ஜிசியை இறுதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது.

    குறிப்பிடப்பட்ட நேரத்தில் ஆஜராகவில்லை என்றால் உங்களால் விளக்கம் அளிக்க முடியவில்லை என்றும் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்துவதில் கடுமையான முறைகேடுகள் ஓஎன்ஜிசியில் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது என்று தேசியக் கமிஷன் தெரிவித்துள்ளது.

    அனைத்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 27 சதவீத ஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு அளிக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. 1993 ஆம் ஆண்டில் ஓஎன்ஜிசியில் வெறும் 11 ஓபிசி வகுப்பினருக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்த காலியிடம் 286. அந்த ஆண்டில் மட்டும் சட்டப்படி 77 ஓபிசி வகுப்பினருக்கு வேலை வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். 1994 ஆண்டில் 99 காலியிடம் இருந்துள்ளது. ஆனால், எட்டு ஓபிசி வகுப்பினருக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படி 26 பேருக்கு வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். இந்த நிலைமை 1993 முதல் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை நடந்து வந்துள்ளது.

    ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த எந்த தகவலும் தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+