யுபிஎஸ்சி மூலம் தலித், பழங்குடிகள், ஓபிசி இடஒதுக்கீட்டைப் பறித்துவிட்ட மோடி.. ராகுல் அட்டாக்
டெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, அரசு அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்கிறது; இதன் மூலம் தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்துவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். யுபிஎஸ்சியானது இடஒதுக்கீடுகளே இல்லாமல் 10 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர், துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
யுபிஎஸ்சி வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இப்போது பெரும் கொந்தளிப்புக்கு காரணமாகி உள்ளது. அதாவது 0 இணை செயலாளர் பதவிகள், 35 இயக்குனர் , துணை செயலாளர் பதவிகள் என மொத்தம் 45 பணியிடங்களுக்கான அறிவிப்புகளை யுபிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இந்த பணியிடங்கள் நேரடி நியமனங்களாகும். இதில் இடஒதுக்கீடு எதுவும் இல்லை. இதனால் தலித், பழங்குடிகள், ஓபிசி வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 22 அல்லது 23 இடங்கள் பறிபோய்விட்டது. இதற்கு எதிராக திமுக, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், மத்திய அரசின் அமைச்சக அதிகாரிகளை யுபிஎஸ்சி நேரடியாக நியமனம் செய்கிறது. இத்தகைய நேரடி நியமனங்கள் மூலமாக தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமையை பிரதமர் நரேந்திர மோடி பறித்துவிட்டார். அரசின் உயர் பதவிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் இடம்பெறவில்லை என எப்போதும் கூறி வருகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கான உரிமையையே பிரதமர் மோடி பறித்துவிட்டார். அரசியல் சாசனத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நடத்திய தாக்குதல் இது. யுபிஎஸ்சிக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். மூலம் அதிகாரிகளை மோடி நியமிக்கிறார். "இந்தியா" இதனை கடுமையாக எதிர்க்கிறது.
செபி உள்ளிட்ட அரசு பதவிகளில் சில கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் அமர வைக்கப்பட்டுள்ளதை பார்க்கலாம். தனியார் துறையில் இருந்து ஒருவரை செபியின் தலைவராக்கியிருப்பது முதல் முறை. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தை தனியார்மயமாக்கி இடஒதுக்கீட்டு முறையை பிரதமர் மோடி ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறார் என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications