மக்களவையில் பேச அனுமதி மறுக்கிறார்கள்! ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு! முதல் நாளே இப்படியா?
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 21ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது. மொத்தம் 8 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விஷயங்களை எழுப்ப திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அவை தொடங்கிய முதல் நாளே, எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது என்று புகார் எழுந்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, "பாதுகாப்பு அமைச்சரும், ஆளும் பாஜகவைச் சேர்ந்தவர்களும் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருந்து யாராவது பேச விரும்பினால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது ஒரு புதிய அணுகுமுறை" என்று விமர்சித்திருக்கிறார்.
மற்ற எம்பிக்கள் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேசும்போது, அரசு தரப்பிலிருந்தும் கருத்து தெரிவிக்க இடம் அளிக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். இரண்டொரு வார்த்தைகள் கூட பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து, இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
கேள்வி நேரம் முடிந்ததும் ஆபரேஷன் சிந்துார் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் எழுப்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். ஆனாலும், அவை விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் மட்டுமே செயல்படும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். கோஷம் எழுப்புவது மற்றும் பதாகைகளுக்கு அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்.
உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்தால், அனைத்து பிரச்சினைகளையும் எழுப்ப அனுமதிப்பதாகவும், ஒவ்வொரு எம்பிக்கும் போதுமான நேரம் ஒதுக்கப்படும் என்றும் பிர்லா உறுதியளித்தார். ஆனால் பேச அனுமதிக்கவில்லை" என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் விமர்சித்திருக்கின்றன.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications