வன்முறையால் எரியும் மணிப்பூர்.. விரைகிறார் ராகுல் காந்தி.. 2 நாள் பயணம்! மக்களுடன் உரையாட திட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29ஆம் தேதி செல்ல உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

Recommended Video

    Manipur-ல் என்ன நடக்கிறது? Kuki VS Meitei சண்டை ஏன்? | Manipur Issue Explained in Tamil

    மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக உருவெடுத்து 50 நாட்களை கடந்துவிட்டது. சுமார் 120 பேர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    மைதேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்த வன்முறையில் ஏராளமானோரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூரைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் மிசோரம், நாகாலாந்து மாநிலங்களுக்கு அகதிகளாக சென்று விட்ட நிலையில், பலர் காடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளள்னர். மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓய்ந்ந்தபாடில்லை.

    Rahul gandhi is going to Manipur on June 29 and 30

    மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக அரசும் மௌனம் சாதிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. பைரேன் சிங் செயல்படாத முதல்வராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்து, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்குச் செல்கிறார். அவர் தனது பயணத்தின் போது இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று மக்களுடன் உரையாடுவார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    மணிப்பூர் சுமார் இரண்டு மாதங்களாக எரிந்து கொண்டிருக்கிறது, இந்த சமூக மோதலில் இருந்து அமைதிக்கு செல்ல ஒரு குணப்படுத்தும் தொடுதல் தேவைப்படுகிறது. இது ஒரு மனிதாபிமான சோகம், வெறுப்பு அல்ல, அன்பின் சக்தியாக இருப்பது நமது பொறுப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மணிப்பூரில் உள்ள நிலைமை குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது,. அப்போது பல எதிர்க்கட்சிகள் மணிப்பூருக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தின.

    ஆனாலும் பாஜக அரசு இதுகுறித்து உறுதியளிக்கவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+