இத்தாலி போயிட்டு வந்த ராகுல் காந்தியை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம்.. பாஜக தலைவர்
டெல்லி: ராகுல் காந்தி இத்தாலியில் இருந்து ஆறு நாட்களுக்கு முன்பு தான் வந்திருப்பதால் அவர் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பு உள்ளதால் ராகுலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பாஜக எம்பி ரமேஷ் பிதுரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக சீனாவில் 2,981 பேர் இறந்துள்ளனர்.இத்தாலியில் புதிய கொரோனா வைரஸ் காரணமாக எழுபத்தொன்பது பேர் இறந்துள்ளனர், கடந்த மாதத்தில் இருந்து 2,500 க்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது- இதில் 14 பேர் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர். இந்நிலையில் இத்தாலி உள்பட 12 நாடுகளைச் சேர்நத்வர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு மத்திய அரசு இப்போது தடை விதித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் இத்தாலி சென்றுவிட்டு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு தான்இந்தியா திரும்பினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, ராகுல் காந்தி ஆறு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து திரும்பினார், எனவே அவரை கொரோனா வைரஸ் பரிசோதிக்க வேண்டும். ராகுல் காந்தியுடன் அமர்ந்திருக்கும் எம்.பி.க்களும் வைரஸ் தாக்கக்கூடும். இத்தாலியைச் சேர்ந்த பலர் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். எனவே அவர் தன்னை பரிசோதித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.
முன்னதா நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி,. "முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் ... முதலில் நீங்கள் மக்களை ஏஏ விவாகரத்தில் தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள் இந்த பக்கமாகவோ அல்லது மற்றவர்களாகவோ இருக்க வேண்டும் என்று உங்கள் தாய் சொன்னார் ... நீங்கள் ஒற்றுமையைக் காட்டச் செல்வதற்கு பதில் வன்முறையைத் தூண்டுகிறீர்கள். உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் ஆறு நாட்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து வந்திருக்கிறீர்கள், விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் சோதனை செய்துள்ளீர்களா? நீங்கள் முன்னெச்சரிக்கைகள் எடுத்தீர்களா அல்லது அதை (கொரோனா வைரஸ்) பரப்ப விரும்புகிறீர்களா? " என்று கூறியிருந்தார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications