ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது.. ஆனால் அவரது இருப்பு நீங்கா இடம்பெறும்.. ராகுல் இரங்கல் கடிதம்
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது என்ற போதிலும் அவரது இருப்பானது நினைவில் இருந்து நீங்காது என அவரது மனைவி சங்கீதாவுக்கு ராகுல்காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 9-ஆம் தேதி உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இரங்கல் செய்தி
அவருக்கு குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஜெட்லி மனைவி சங்கீதா
இந்த நிலையில் ராகுல் காந்தி, ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உங்கள் கணவர் அருண் ஜெட்லி காலமானார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வாழ்க்கை
கடந்த 40 ஆண்டுகளாக ஜெட்லியின் அரசியல் வாழ்க்கை ஈடு இணையற்றது. அரசியலில் அவர் ஆழமான தடங்களை பதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்க போவதில்லை. ஆனால் அவரது இருப்பு என்றும் நினைவில் கொள்வோம்.

பிரார்த்தனை
ஜெட்லி இல்லாத இந்த கடினமான காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு அமைதியும் மனவலிமையும் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் ராகுல் கூறியிருக்கிறார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications