ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது.. ஆனால் அவரது இருப்பு நீங்கா இடம்பெறும்.. ராகுல் இரங்கல் கடிதம்
Recommended Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்காது என்ற போதிலும் அவரது இருப்பானது நினைவில் இருந்து நீங்காது என அவரது மனைவி சங்கீதாவுக்கு ராகுல்காந்தி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 9-ஆம் தேதி உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
எனினும் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இரங்கல் செய்தி
அவருக்கு குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதால் அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

ஜெட்லி மனைவி சங்கீதா
இந்த நிலையில் ராகுல் காந்தி, ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உங்கள் கணவர் அருண் ஜெட்லி காலமானார் என்ற செய்தி எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வாழ்க்கை
கடந்த 40 ஆண்டுகளாக ஜெட்லியின் அரசியல் வாழ்க்கை ஈடு இணையற்றது. அரசியலில் அவர் ஆழமான தடங்களை பதித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இனி ஜெட்லியின் குரல் எதிரொலிக்க போவதில்லை. ஆனால் அவரது இருப்பு என்றும் நினைவில் கொள்வோம்.

பிரார்த்தனை
ஜெட்லி இல்லாத இந்த கடினமான காலக்கட்டத்தில் உங்கள் குடும்பத்தினருக்கு அமைதியும் மனவலிமையும் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என இரங்கல் செய்தியில் ராகுல் கூறியிருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications