சிவில் சர்வீஸ் தேர்வில் 420-வது இடம் பிடித்த ராகுல் மோடி.. இணையத்தில் சூடான விவாதம்
டெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை பிடித்த பிரதீப் சிங்கைவிட 420ஆவது இடம் பிடித்த ராகுல் மோடி என்ற பெயர் தான் இணையதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
2019-ம் ஆண்டு செப்டம்பரில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 927 பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. பிரதீப் சிங் என்பவர் இந்த தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்), இந்திய வெளியுறவு சேவை (ஐ.எஃப்.எஸ்) மற்றும் இந்திய போலீஸ் சேவை (ஐ.பி.எஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒபிசி 251 பேர்
மொத்த தகுதி வாய்ந்த தேர்வாளர்களில் 304 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர், 78 பேர் பொருளாதார பலவீனமான பிரிவைச் சேர்ந்தவர்கள் (ஈ.டபிள்யூ.எஸ்) ஆவர். பின்தங்கிய வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் (ஓ.பி.சி) 251 என்றும், பட்டியல் சாதியினர் (எஸ்.சி), 129 பேர் என்றும், பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி) பிரிவில் 67 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

15 நாட்களில் மதிப்பெண்
ஒட்டுமொத்தமாக 182 தேர்வர்கள் ரிசர்வ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாகி உள்ளனர். அடுத்த மதிப்பெண் அளவு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் ரேங்க்
இந்த தேர்வில் வினோதமான ஒரு சம்பவமும் நடந்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசியல் தலைவர்களான மோடி மற்றும் ராகுல் பெயரை கொண்ட ராகுல் மோடி என்பவர் 420-வது இடத்தை பிடித்துள்ளார்

எதிர்எதிர் அரசியல்
இவரின் பெயர் இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. தேசிய அரசியலில் ராகுல்காந்தியும், நரேந்திர மோடியும் அரசியலில் எதிர் எதிராக உள்ளவர்கள் ஆவர் . இவர்களின் பெயர்களை கொண்ட நபர் சிவில் சர்வீசஸ் தேர்வில் 420 ஆவது இடம் பிடித்திருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆவர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications