Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரயில்வே துறை செய்தது மிக பெரிய தவறு.. அதை சரி செய்ய ஒரே வழிதான்!" வந்தே பாரத்தை வடிவமைத்த மணி பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே சாதாரண மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யாததன் மூலம் தவறு செய்துவிட்டதாக வந்தே பாரத் ரயில்களை உருவாக்குவதில் மூளையாக இருந்த முன்னாள் ரயில்வே அதிகாரி சுதன்ஷு மணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கவனம் வந்தே பாரத் ரயில்களில் மட்டும் இருப்பதாகவும் ஏசி டிக்கெட் எடுக்க முடியாத மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ரயில்வே துறை ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

Railway has made a huge mistake by concentrating on AC trains says Vande Bharat Mani

இந்திய ரயில்வே தொழிற்சாலையில் ஆகஸ்ட் 2016 முதல் டிசம்பர் 2018 வரை மேலாளராகப் பணிபுரிந்தவர் தான் மணி.. வந்தே பாரத் ரயில்களை உருவாக்குவதில் இவருக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்தான் இப்போது ரயில்வே துறை சாதாரண மக்களின் பயணம் குறித்துச் சிந்திக்கவில்லை என விமர்சித்துள்ளார்.

வந்தே பாரத் மணி: இது குறித்து மணி மேலும் கூறுகையில், "வந்தே பாரத் என்பது அதிகம் செலவு செய்தாலும் ஓகே சவுகரியமாகப் பயணிக்க வேண்டும் என்பவர்களுக்கான ரயில்.. அதேபோல சாதாரண மக்களும் கண்ணியத்துடன் பயணிப்பதை உறுதி செய்ய வேண்டும்.. அவர்களுக்காகவும் நீங்கள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.. இதற்கு முன்பும் இது குறித்து யோசித்தது இல்லை.. ஆனால், இப்போது நிலைமை மோசமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களிலும் தினசரி பயணிக்கும் கூலி வேலை செய்வோர் அல்லது மாணவர்கள் பெரும்பாலும் சாதாரண டிக்கெட் உடன் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் செல்வார்கள். ஆனால், இப்போது நிலைமை மோசமடைந்துள்ளது. முன்பு சில மாநிலங்களில், குறிப்பாகப் பீகார், ஒடிசா மற்றும் உ.பி-இல் தான் ​​தொழிலாளர்கள் அல்லது தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் இதுபோல பயணிப்பார்கள். நானே பல வீடியோக்களை பார்த்துள்ளேன். ஆனால், இப்போது முன்பைவிட நிலைமை மோசமாகிவிட்டது என்றே நான் நினைக்கிறேன்.

ஏசி பெட்டிகள்: சில ஆண்டுகளுக்கு முன்பு ஏசி பெட்டிகளைத் தயாரிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் ஏசி அல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்தது. பியூஷ் கோயல் ரயில்வே அமைச்சராக இருந்த போது படிப்படியாக அனைத்து ரயில்களும் ஏசி வசதி கொண்டதாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் ஏசி வசதிகளை வழங்குவது நல்ல யோசனையாக இருந்தாலும், அது நடக்கவில்லை..

இதற்கு கடும் விமர்சனம் எழுந்ததால் அரசு தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டது. மீண்டும் ஏசி பெட்டிகள் குறைவு.. ஏசி இல்லாத பெட்டிகள் அதிகம் என்ற கொள்கையைக் கையில் எடுத்தது. ஆனால், இதைக் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.

சாதாரண பெட்டிகள் குறைவு: இப்போதும் பல ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்யப்படும் ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இப்படி திடீரென பெட்டிகள் குறைக்கப்பட்டால் அந்த மக்கள் எங்குச் செல்வார்கள்? அவர்களும் பயணிக்க வேண்டும் தானே.. இதன் காரணமாகவே அவர்கள் ஏசி பெட்டிகள் நுழையும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது.

ரயில்வே துறை கவனம் வந்தே பாரத் மீது இருந்தது.. அது ரயில்வே துறைக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. ஆனால், அது சாதாரண பயணிகளின் தேவைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பிவிட்டது.. தேர்தலிலும் கூட வந்தே பாரத் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. சொல்லப் போனால் அது அரசுக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்தியது.

தேர்தல்: பணக்காரர்கள் மட்டுமே ரயில்களில் பயணிக்கலாம்.. சாதாரண மக்களால் பயணிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இதுபோன்ற சூழல்களில் இந்த விமர்சனங்கள் வரவே செய்யும். வந்தே பாரத் எதையும் சாதிக்கவில்லை என்று பலரும் விமர்சித்தே வருகிறார்கள்.

ஆனால், வந்தே பாரத் என்பது தனியானது. அதைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம் சாதாரண மக்களைப் பற்றியும் மறந்துவிடக்கூடாது. ஏதோ ஒரு இடத்தில் ரயில்வே துறை தவறு செய்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

தீர்வு என்ன: இந்த தவறை சரிசெய்ய ரயில்வே துறை இப்போது ஏசி பெட்டிகள் தயாரிப்பைக் குறைத்து.. ஏசி அல்லாத பெட்டிகளைத் தயாரிப்பதை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அதுவும் தவறு. நீங்கள் அதிக ஏசி பெட்டிகளைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும்.. அதேநேரம் சாமானிய மக்களுக்கும் கவனம் செலுத்த வேண்டும்.. இரண்டிலும் கவனம் இருக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+