ராஜஸ்தானில் அமலாகிறது மினிமம் சேலரி திட்டம்.. காங்கிரஸ் அதிரடி மூவ்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?
அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதற்கட்டமாக அமலுக்கு வர இருக்கிறது.
டெல்லி: அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதற்கட்டமாக அமலுக்கு வர இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வேலை பார்க்காத மக்கள் அனைவருக்கும் வேறுபாடு இன்றி இந்த சம்பளம் அளிக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது ராஜஸ்தானில் அமலுக்கு வர இருக்கிறது. ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் அஷோக் கேக்லாட் ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றார்.
தற்போது ராஜஸ்தானில் வேலையில்லாதவர்களுக்கு சம்பளம் திட்டம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேக்லாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கனவு ராஜஸ்தானில் இருந்து நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி ஆண்களுக்கு ரூ.3000 சம்பளம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ.3500 சம்பளம் வழங்கப்படும், என்று கூறி இருக்கிறார். எந்த வேறுபாடும் இன்றி இந்த சம்பளம் வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டம் மார்ச் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று அஷோக் கேக்லாட் தெரிவித்துள்ளார். இது ராஜஸ்தானில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications