சிபிஐ தலைமையகத்திலேயே சிபிஐ ரெய்டு.. லஞ்ச புகாரில் சிபிஐ சிறப்பு இயக்குனருக்கு கிடுக்குப்பிடி!

சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் நேற்று சிபிஐ தலையகத்தில் சிபிஐ அமைப்பு ரெய்டு நடத்தியது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வரலாற்றில் முதல் முறையாக சிபிஐ அலுவலகத்தில் சோதனை

    டெல்லி: சிபிஐ சிறப்பு இயக்குனர் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருப்பதால் நேற்று சிபிஐ தலைமையகத்தில் சிபிஐ அமைப்பு ரெய்டு நடத்தியது.

    இந்திய வரலாற்றில் முதல் முறை இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. அதேபோல் நேற்று முக்கியமான சிபிஐ அதிகாரியான தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார்.

    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ அமைப்பு வழக்கு பதிவு செய்து இருக்கிறது. இவர்தான் லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார்.

    ரெய்டு நடத்தினார்

    ரெய்டு நடத்தினார்

    நேற்று மாலை சிபிஐ இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு விஷயத்தை செய்தது. சிபிஐ அமைப்பு டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திலேயே நேற்று ரெய்டு நடத்தியது. சிபிஐ இயக்குனர் அலோக் வெர்மாவின் குட் புக்கில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்தான் இந்த ரெய்டை நடத்தியது. சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் அறைகளில் சோதனை நடந்தது.

    நீக்கப்படுவார்

    நீக்கப்படுவார்

    சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானா இந்த வார இறுதியில் பதவி விலகுவார். இல்லையென்றால் இந்த வார இறுதியில் பதவியில் இருந்து நீக்கப்படுவார். நேற்று சிபிஐ இயக்குனர் வெர்மா பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானாவிற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பிரதமர் மோடியே நேரடியாக உத்தரவுகளை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

    கைது செய்தனர்

    கைது செய்தனர்

    இந்த நிலையில் அஸ்தானாவிற்கு நெருக்கமான சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐயை சேர்ந்த அதிகாரி தேவேந்தர் குமார் இன்று கைது செய்யப்பட்டார். அஸ்தானா லஞ்சம் வாங்க உதவி செய்தது இவர்தான் என்று தகவல்கள் வருகிறது. இதை தொடர்ந்து இன்னும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

    என்ன வழக்கு

    என்ன வழக்கு

    இறைச்சி ஏற்றுமதி செய்து வந்த தொழிலதிபர் மொயின் குரேஷியின் வீட்டில் 2014ல் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் பல சிபிஐ அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர் என்று புகார் வந்தது. அதனால் இது தொடர்பான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிறப்பு விசாரணை குழு விசாரித்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராகேஷ் அஸ்தானா 3 கோடி வாங்கி குற்றவாளிகளை விடுவித்தார் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+