என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது!
டெல்லி: என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது என்று அளவில் உள்ளது அவரது பாராட்டு பொதுவாகவே பிரதமர் மோடியை ஒபிஆர் எனப்படும் ஓபி ரவீந்திராநாத் வியந்து பாராட்டுவார் என்றாலும், லோக்சபாவில் பிரதமர் மோடியை பாராட்டிய விதம் பாஜகவினரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
Recommended Video

லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் அதிமுகவைச் சேர்ந்த தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர் கூறும் போது,
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வந்ததை விமர்சித்த ரவீந்திரநாத், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து ஜல்லிக்கட்டை ராகுல்காந்தி ரசிக்கிறார் என்றார்.

மோடி ஆதரவால் மாற்றம்
மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் சிறப்பான முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு காரணமாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்த வரலாறை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

திமுக எம்பிக்கள் கூச்சல்
தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இன்று நாட்டிலேயே சிறந்த மாநிலமாக பல்வேறு விருதுகளை பெற்று வருவதாக கூறிய ரவீந்திரநாத் எம்பி,. ஆனால் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகம் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல வெற்றுக் கூச்சலிட்டு வருகிறார்கள் என்று விமர்சித்தார்.

ஜவுளி பூங்கா
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை வெகுவாக பாராட்டிய ஓபி ரவீந்திரநாத், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார் என நன்றி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பெரும்தொற்றை தடுக்க தமிழகத்துக்கு கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ரவீந்திரநாத், பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 2 பூங்காக்கள் தமிழகத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ரவீந்திரநாத் பாராட்டு
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய ரவீந்திராத், மழை பெய்யும் போது பிற பறவைகள் தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து மழையிலிருந்து தப்ப முற்படும்போது பருந்து மட்டும் மேகத்துக்கு மேல் பறந்து தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லும் என்றும், அதேபோல் தான் கொரோனா பெரும்தொற்று காலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பிரச்னையை சமாளித்தார் என்று வித்தியாசமான முறையில் பாராட்டினார். இதை கேட்டு பாஜகவினரே ஆச்சர்யம் அடைந்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications