Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: என்னம்மா யோசிக்குறாரு ஒபிஆரு.. பிரதமர் மோடியை இப்படி பாராட்ட யாராலும் முடியாது என்று அளவில் உள்ளது அவரது பாராட்டு பொதுவாகவே பிரதமர் மோடியை ஒபிஆர் எனப்படும் ஓபி ரவீந்திராநாத் வியந்து பாராட்டுவார் என்றாலும், லோக்சபாவில் பிரதமர் மோடியை பாராட்டிய விதம் பாஜகவினரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Recommended Video

    3வது முறையாக ஆட்சியில் அமர்வது உறுதி: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் நம்பிக்கை!

    லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் அதிமுகவைச் சேர்ந்த தேனி லோக்சபா எம்பி ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர் கூறும் போது,
    சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுகவே தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

    சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வந்ததை விமர்சித்த ரவீந்திரநாத், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபோது ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துவிட்டு தற்போது தமிழகம் வந்து ஜல்லிக்கட்டை ராகுல்காந்தி ரசிக்கிறார் என்றார்.

    மோடி ஆதரவால் மாற்றம்

    மோடி ஆதரவால் மாற்றம்

    மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் சிறப்பான முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு காரணமாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்த வரலாறை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

    திமுக எம்பிக்கள் கூச்சல்

    திமுக எம்பிக்கள் கூச்சல்

    தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு இன்று நாட்டிலேயே சிறந்த மாநிலமாக பல்வேறு விருதுகளை பெற்று வருவதாக கூறிய ரவீந்திரநாத் எம்பி,. ஆனால் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகம் ஒன்றுமே செய்யவில்லை என்பதுபோல வெற்றுக் கூச்சலிட்டு வருகிறார்கள் என்று விமர்சித்தார்.

    ஜவுளி பூங்கா

    ஜவுளி பூங்கா

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை வெகுவாக பாராட்டிய ஓபி ரவீந்திரநாத், பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களை அளித்தார் என நன்றி தெரிவித்தார். கொரோனா வைரஸ் பெரும்தொற்றை தடுக்க தமிழகத்துக்கு கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த ரவீந்திரநாத், பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 2 பூங்காக்கள் தமிழகத்தில் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    ரவீந்திரநாத் பாராட்டு

    ரவீந்திரநாத் பாராட்டு

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பேச்சை சுட்டிக்காட்டி பேசிய ரவீந்திராத், மழை பெய்யும் போது பிற பறவைகள் தங்கள் கூட்டுக்குள் ஒளிந்து மழையிலிருந்து தப்ப முற்படும்போது பருந்து மட்டும் மேகத்துக்கு மேல் பறந்து தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லும் என்றும், அதேபோல் தான் கொரோனா பெரும்தொற்று காலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி தைரியமாக பிரச்னையை சமாளித்தார் என்று வித்தியாசமான முறையில் பாராட்டினார். இதை கேட்டு பாஜகவினரே ஆச்சர்யம் அடைந்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+