"நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வெற்றி!" திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றதற்குத் திரௌபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யக் கடந்த ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர். அதில் திரௌபதி முர்முவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்தன.

திரௌபதி முர்மு
கடந்த ஜூலை 18இல் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் திரௌபதி முர்முவுக்கு அதிகமான வாக்குகளே கிடைத்துள்ளது. மூன்றாம் சுற்றின் முடிவில் திரௌபதி முர்மு 50%க்கும் அதிகமான வாக்குகளைத் தாண்டினார். இதன் மூலம் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இதற்காகப் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா வரலாற்றைப் படைத்து உள்ளது. 130 கோடி இந்தியர்கள் கிழக்கு இந்தியாவின் தொலைதூரப் பகுதியில் பிறந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் மகளை நம் குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்து உள்ளனர்.

நம்பிக்கை ஒளி
திரௌபதி முர்முஜியின் வாழ்க்கை, அவரது ஆரம்பக்கால போராட்டங்கள், அவரது சேவை மற்றும் அவரது முன்மாதிரியான வெற்றி ஆகியவை ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது. அவர் நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நம்பிக்கை ஒளியாக உருவெடுத்துள்ளார்.

நன்றி
திரௌபதி முர்மு ஒரு சிறந்த எம்எல்ஏ மற்றும் அமைச்சராக செயல்பட்டவர். ஜார்க்கண்ட் ஆளுநராகவும் சிறப்பாக பணியாற்றியவர். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை முன்னின்று வழிநடத்தி வலுப்படுத்தும் ஒரு சிறந்த குடியரசு தலைவராக அவர் இருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்த அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திரௌபதி முர்முவின் சாதனை வெற்றி நமது ஜனநாயகத்திற்கு நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video

வாழ்த்து
அதேபோல பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், ஆகியோர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதேபோல ராகுல் காந்தி, மாயாவதி, ப சிதம்பரம் உள்ளிட்டோரும் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications