ஜாலியன்வாலா பாக் நினைவு தினம்.. ரூ 100 நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜாலியன்வாலா பாக் நினைவு தினத்தையொட்டி ரூ 100 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலட் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் ஏராளமானோர் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. எனினும் அவர்கள் கலையவில்லை. இதையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இவர்கள் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 100-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி 100 ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications