சர்ச்சை! உத்தரகண்ட் சுரங்க மீட்பு பணி! ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சருக்கு "சிவப்பு" கம்பள வரவேற்பு
டெல்லி: உத்தரகண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அங்கே சென்றுள்ள அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சில்கியாரா என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுமார் 40 தொழிலாளர்கள் அப்படியே உள்ளே சிக்கினர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 190 மணி நேரத்தைக் கடந்து 9ஆவது நாளாகத் தொடர்கிறது. உள்ளே இருப்பவர்களுக்கு மிகக் குறைந்த உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே இருக்கிறது.
நாட்கள் செல்ல செல்ல அவர்கள் உடல்நலம் மோசமாகும் என்று கவலை எழுந்துள்ளது. இதுவரை தொழிலாளர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. மேலும், மீட்புப் பணிகளின் போது கூடுதலாக மண் சரிவு ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் மீட்புப் படையினர் அதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாகத் துளையிட்டு அவர்களை மீட்கும் திட்டத்தை அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், இன்று அமைச்சர் நேரடியாக மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். அப்போது அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
அதாவது மீட்புப் பணிகளை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் கட்கரி, முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோர் அங்கே வந்துள்ள நிலையில், அவர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் சேர்களுக்கு கவர் போடப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக பந்தலையும் புதிதாக அமைத்துள்ளனர்.
மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அதைக் கவனிக்காமல் இப்படி அமைச்சர்களுக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் பலரும் சாடிவருகின்றனர். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications