ரூ. 100ஐ தாண்டிய பெட்ரோல் விலை... காரணம் முந்தைய அரசு தான்... பிரதமர் மோடி குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டிற்கு தேவையான எரிசக்திக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்காததாலேயே இப்போது எரிபொருள்கள் விலை உயர்ந்து வருவதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு
இந்நிலையல், இறக்குமதியைக் குறைக்க முந்தைய அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுக்காததே விலையேற்றத்திற்குக் காரணம் என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "2019-20ஆம் ஆண்டில் நமது நாட்டிற்குத் தேவையான எரிபொருள்களில் 85 சதவிகிதத்தையும் கேஸ் தேவைகளில் 53% சதவிகிதத்தையும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய அரசு
ஒரு நாடு இவ்வளவு தூரம் இறக்குமதியைச் சார்ந்து இருக்கலாமா? நாட்டிற்குத் தேவையான எரிசக்திக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன. இதனாலேயே தற்போது நடுத்தர வர்க்கம் அதிக சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்" என்று காங்கிரஸ் அரசை மறைமுகமாகத் தாக்கி பேசினார்.

எத்தனால் கலப்பு
தற்போதுள்ள மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தின் கவலைகளை உணர்ந்திருப்பதாகவும் இதனாலேயே பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் விதத்தை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். கரும்பிலிருந்து எடுக்கப்படும் எத்தனால் இறக்குமதியைக் குறைக்க உதவுவதோடு விவசாயிகளுக்குக் கூடுதல் வருமான ஆதாரத்தையும் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
மத்திய அரசு தற்போது எரிசக்தி இறக்குமதி சார்புநிலையைக் குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், 2030ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலில் 40 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்தே உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இயற்கை எரிவாயுவிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications