ஜாக்பாட் இந்தியாவுக்கு.. ஐரோப்பாவுக்கு செல்லும் ரஷ்ய ஆயில்.. லாபம் குவிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
டெல்லி: ரஷ்ய - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் தவிர்த்துவிட்டன. இதனையடுத்து தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாதான் அதிக அளவில் எரிபொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
ரஷ்ய-உக்ரைன் மோதலுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 154,000 பீப்பாய்கள் (பிபிடி) டீசல் மற்றும் ஜெட் விமானத்திற்கு தேவையான எரிபொருள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் போருக்கு பிறகு இந்த ஏற்றுமதி அளவானது 200,000 பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. இதனால் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற் துறையானது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

அதேபோல இந்தியா ஈராக்கிலிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தாலும் அது குறைந்த அளவில்தான் இருந்தது. காரணம் ஈராக்கை விட ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இங்கு கொண்டு வருவது சிரமமான காரியமாகும். ஆனால் ஐரோப்பாவில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் தற்போது ஈராக்கை விட ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை அதிக அளவில் இந்திய நிறுவனங்கள் இறக்குமதி செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications