விவசாயிகள் போராட்டம்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? நாளை கூடும் வல்லுநர் குழு
டெல்லி: விவசாய சட்டங்கள் தொடர்பாக டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள வல்லுநர் குழு, முதன்முதலாக நாளை கூடி ஆலோசிக்க உள்ளது.
மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 50 நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் இந்த விவசாய சட்டங்களுக்கு தற்காலிகமாகத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், இது தொடர்பான முடிவுகளை எடுக்க நான்கு பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான், கடந்த வாரம் இக்குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். விவசாயிகள் போராட்டத்தைக் கலைப்பதற்காகவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்பை அளித்துள்ளதாக பல்வேறு விவசாயிகளும் விமர்சித்துள்ளனர்.
பூபிந்தர் சிங் மானை தவிர இந்தக் குழுவில் அனில் கன்வாட், வேளாண் பொருளாதார வல்லுநர்களான அசோக் குலாட்டி மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு பூசா வளாகத்தில் நாளை முதல் முறையாகச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இத்தகவலை அனில் கன்வாட், உறுதி செய்துள்ளார். குடியரசு தினத்தில் தலைநகரில் டிராக்டர் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழுவில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அனில் கன்வாட் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அமைத்த நான்கு பேர் குழுவில் இருந்து ஒருவர் விலகிவிட்டார். மற்றொரு நபரை உச்ச நீதிமன்றம் நியமிக்கவில்லை என்றால் மூன்று பேருடன் நாங்கள் எங்கள் பணிகளைத் தொடங்குவோம். இது குறித்த விதிமுறைகளைப் பெற்றுள்ளோம். வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் பணிகளைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications