எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு?
டெல்லி: அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு காரணமாக, நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக அரசு கவிழ போவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜத கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்களும்.. ஆக மொத்தம் 16 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இவர்களில் யாருடைய ராஜினாமா கடிதத்தையும் சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை.

தலைமை நீதிபதி அமர்வு
இந்த நிலையில்தான், ராஜினாமா செய்ததில், 15 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகினர். தங்கள் ராஜினாமா கடிதங்களை மீது சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும், கேட்டறிந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

சபாநாயகர் அதிகாரம்
கர்நாடக சபாநாயகருக்கு எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் எப்போது முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நியாயமான காலவரையறைக்குள் சபாநாயகர் அந்த முடிவை எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த முடியாது
இந்த தீர்ப்பில், மற்றொரு அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது என்னவென்றால், ராஜினாமா கடிதங்களை கொடுத்து, அதன் முடிவுக்காக காத்திருக்கக் கூடிய எம்எல்ஏக்கள், சட்டசபைக்கு வந்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது. அது எம்எல்ஏக்களின் விருப்பத்தை பொருத்தது, என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விப் உத்தரவு பொருந்தாது
முதல்வர் குமாரசாமி தானாக முன்வந்து, நாளை வியாழக்கிழமை, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக அறிவித்திருந்தார். அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து அவர்களை கட்டாயம் சட்டசபைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பது, ஆளும் கட்சியின் திட்டமாக இருந்தது. ஒரு வேளை, உத்தரவை மீறினால், அந்த எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யமுடியும், என்பதால் பயந்து போய் அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வருவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே விப் உத்தரவு அவர்களுக்கு பொருந்தாது என்பது திட்டவட்டமாக தெரிந்து போய்விட்டது.

குமாரசாமி ஆட்சி
எனவே நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, குமாரசாமி அரசு கவிழப்போவது, ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஒருபக்கம், சபாநாயகரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், மற்றொரு பக்கம், அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது, என்ற தீர்ப்பின் அம்சத்தின் மூலம், இந்த தீர்ப்பு அரசுத் தரப்புக்கு பெரும் அடி என்று பார்க்கப்படுகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications