மெரினாவில் போராட தடை.. அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Recommended Video

டெல்லி: சென்னை மெரினாவில் போராட யாருக்கும் அனுமதி கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரை நிர்வாண போராட்டத்தில் இரு நாட்கள் நடத்திய போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய அய்யாக்காண்ணு, மெரினாவில் ஒரு மாதம் போராட்டம் நடத்த அனுமதிக் கோரினார். ஆனால் தமிழக அரசோ ஒரு நாள் வேண்டுமானாலும் போராட்டம் நடத்த அனுமதி தருவோம். ஆனால் ஒரு மாதமெல்லாம் தர முடியாது என கூறியது.
இதை எதிர்த்து நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டு அய்யாக்கண்ணுவின் மனுவை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications