புல்வாமா அட்டாக் எதிரொலி… பாதுகாப்பு திடீர் வாபஸ்… யாருக்கு என்று தெரிய வேண்டுமா?
Recommended Video

டெல்லி:ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் 5 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
புல்வாமாவில் சில நாட்கள் முன்பு.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அப்போது பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் உள்ள சிலர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயிடமும், தீவிரவாத அமைப்புகளிடமும் தொடர்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவோம்" என்று கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில், பிரிவனைவாத தலைவர்களுக்கான பாதுகாப்பை திரும்பப் பெறுவது என்ற நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. பிரிவினை வாத தலைவர்கள், மிர்வாஸ் உமர் பரூக், அப்துல் கானி பாட், பிலால் லோன், ஹசிம் குரோஷி, ஷபிர் ஷா ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் என்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத தலைவர் சயித் அலி ஷா கிலாணிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறுவது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், பிரிவினை வாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து பாதுகாப்பும், வாகனங்களும் ஞாயிறு மாலைக்குள் திரும்பப் பெற வேண்டும். எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications