Train Fare concession: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை? எப்போது அமலாகிறது?
டெல்லி: கொரோனா காலத்தில் (2020 மார்ச் முதல்) நிறுத்தி வைக்கப்பட்ட, மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் கட்டண சலுகை, மீண்டும் திரும்ப வர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது லட்சக்கணக்கான மூத்தவர்களுக்கு பெரும் நிம்மதியாக அமையும்!
இந்திய ரயில்களில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு லோயர் பர்த், சக்கர நாற்காலி, டிக்கெட் கவுன்ட்டர்களில் தனி வரிசை போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக ரயிலில் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை கொடுக்கப்பட்டு வந்தது.
அதாவது 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 40% தள்ளுபடியும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% தள்ளுபடியும் கொடுக்கப்பட்டது.
இந்த கட்டண சலுகை மெயில், எக்ஸ்பிரஸ், ராஜதானி, ஷதாப்தி, துரோணா உள்ளிட்ட பல ரிசர்வ்ட் ரயில்களில் பொருந்தும். ஆன்லைன் (IRCTC) அல்லது கவுன்ட்டரில் "சீனியர் சிட்டிசன்" ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் தானாக கட்டணம் குறையும். பயணத்தின் போது வயது ஆதாரம் (ஆதார், வாக்காளர் அடையாளம், பாஸ்போர்ட் போன்றவை) காட்ட வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது!
ஆனால் கொரோனா காலத்தில் நிலவிய நிதி பற்றாக்குறையால் இந்த கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட இந்த சலுகை திரும்ப வர வேண்டும் என பல ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அது போல் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பல உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால் நிதி அமைச்சகமும், ரயில்வே அமைச்சகமும் இணைந்து கட்டண சலுகையை கொடுப்பது குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனவே இந்த 40 சதவீதம், 50 சதவீத கட்டண சலுகைகள் மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள். இது கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே விஞ்சியது.
இது ஏன் முக்கியம்?
மருத்துவ சிகிச்சை, குடும்ப உறவுகளை சந்திக்க, திருத்தல யாத்திரைக்கு செல்லும் மூத்தவர்களுக்கு பயணச் செலவு பெரும் சுமைதான். இந்த சலுகை திரும்ப வந்தால், அவர்கள் சுதந்திரமாக, குறைந்த செலவில் பயணிக்கலாம் - இது சமூக நலனுக்கும் பெரும் பலம்! இன்னும் அதிகாரப்பூர்வ உறுதி வரவில்லை என்றாலும், வட்டாரங்கள் "விரைவில் நல்ல செய்தி வரும்" என்கின்றன.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications