Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள்.. சசிதரூர் வைத்த முக்கியமான கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு நல்லதொரு பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் வலியுறுத்தியுள்ளார்.

உலகிற்கே தேவையான பெட்ரோல், கேஸ், டீசல் உள்ளிட்டவற்றை தரும் கச்சா எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்வது வளைகுடா நாடுகள் தான். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குவைத் முக்கியமான பங்குவகிக்கிறது.. உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடாக குவைத் விளங்குகிறத.

Kuwait Shashi Tharoor Indian

குவைத்தில் ஏராளமான எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு மையங்கள் பல இருக்கின்றன. எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள் குவைத்தில் செயல்படுகின்றன.. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பலரும் இந்தியர்கள் ஆவார். குறிப்பாக சொல்வது என்றால், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் குவைத்தில் இருக்கிறார்கள். சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பலர் குவைத்தில் பணியாற்றுகிறார்கள்.. கேரளாவின் குறிப்பிட்ட சதவீதம் மக்கள் குவைத்தில் பல்வேறு முக்கிய பணிகளில் பணியாற்றுகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார். அதாவது சுமார் 10 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள்.. இதுதவிர அங்கு பணியாற்றும் தொழிலாளர்களிலும் கணிசமானோர் இந்தியர்கள் ஆவார். குவைத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி உள்ளனர்.. குடும்பமாக பலர் தங்கி உள்ள நிலையில், குடும்பத்தினரை இந்தியாவிலேயே விட்டுவிட்டு தனியாக வசிப்பவர்களும் அதிகமாக உள்ளனர். அப்படி வசிப்பவர்களுக்கு தொழிலாளர் முகாம்கள் அதிக அளவில் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளன.

குவைத் அடுக்கமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் இறந்தவர்களின் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார். இந்த விபத்தை தொடர்ந்து திருவனந்தபுரம் எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். இதன்படி குவைத் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களுக்கு நல்லதொரு பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறதியுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+