“கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை!” முதல் முறையாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, நடைபெற இருந்த தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் பங்கேற்ற மந்தனா, தனது அணுகுமுறை குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, "கிரிக்கெட் மீதான அன்பு அளப்பரியது. என் வாழ்வில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை. இந்திய ஜெர்சியை அணியும் போது, வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்காது. நாட்டிற்காக, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, போட்டியை வெல்வதே மனதில் இருக்கும்.
ஜெர்சியை அணியும்போதே உங்கள் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, களத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கோடி மக்களில் நீங்களும் ஒருவர். இந்த எண்ணமே தீவிர கவனம் செலுத்தி, செயல்படப் போதுமானது" என்று கூறியுள்ளார்.
அதேபோல டீமுக்குள் கருத்து வேறுபாடுகள் வருமா என்பது குறித்த கேள்விக்கு, "நான் இதை பிரச்சனையாகக் கருதுவதில்லை. ஏனெனில், எல்லோரும் நாட்டிற்காக வெல்ல விரும்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப் பார்வை உண்டு. உண்மையில், இந்த விவாதங்கள் இல்லாமல் களத்தில் வெல்ல முடியாது. கருத்து வேறுபாடுகள் இல்லை என்றால், வெற்றிக்கு ஆர்வம் இல்லை என்றே பொருள். இதுபோன்ற விவாதங்கள் எங்களுக்குள் நடப்பது வழக்கம்தான்" என பதிலளித்துள்ளார்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம நவ. 23 அன்று நடக்க இருந்தது. ஆனால், தந்தை ஸ்ரீனிவாஸுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7 அன்று தனது திருமணத்தை ரத்து செய்வதாக மந்தனா மற்றும் முச்சல் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட்டாக அறிவித்தனர்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் தனது திருமணத்தை ரத்து செய்த பிறகு, மந்தனா பொது வெளியில் தோன்றியது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 21 முதல் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 சர்வதேசத் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 2 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் இருதரப்புத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications