“கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை!” முதல் முறையாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா
டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, நடைபெற இருந்த தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் பங்கேற்ற மந்தனா, தனது அணுகுமுறை குறித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, "கிரிக்கெட் மீதான அன்பு அளப்பரியது. என் வாழ்வில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை. இந்திய ஜெர்சியை அணியும் போது, வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்காது. நாட்டிற்காக, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, போட்டியை வெல்வதே மனதில் இருக்கும்.
ஜெர்சியை அணியும்போதே உங்கள் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, களத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கோடி மக்களில் நீங்களும் ஒருவர். இந்த எண்ணமே தீவிர கவனம் செலுத்தி, செயல்படப் போதுமானது" என்று கூறியுள்ளார்.
அதேபோல டீமுக்குள் கருத்து வேறுபாடுகள் வருமா என்பது குறித்த கேள்விக்கு, "நான் இதை பிரச்சனையாகக் கருதுவதில்லை. ஏனெனில், எல்லோரும் நாட்டிற்காக வெல்ல விரும்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப் பார்வை உண்டு. உண்மையில், இந்த விவாதங்கள் இல்லாமல் களத்தில் வெல்ல முடியாது. கருத்து வேறுபாடுகள் இல்லை என்றால், வெற்றிக்கு ஆர்வம் இல்லை என்றே பொருள். இதுபோன்ற விவாதங்கள் எங்களுக்குள் நடப்பது வழக்கம்தான்" என பதிலளித்துள்ளார்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம நவ. 23 அன்று நடக்க இருந்தது. ஆனால், தந்தை ஸ்ரீனிவாஸுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7 அன்று தனது திருமணத்தை ரத்து செய்வதாக மந்தனா மற்றும் முச்சல் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட்டாக அறிவித்தனர்.
இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் தனது திருமணத்தை ரத்து செய்த பிறகு, மந்தனா பொது வெளியில் தோன்றியது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 21 முதல் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 சர்வதேசத் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 2 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் இருதரப்புத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications