Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கிரிக்கெட்டைவிட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை!” முதல் முறையாக மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, நடைபெற இருந்த தனது திருமணம் ரத்து செய்யப்படுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இது குறித்து தற்போது மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் பங்கேற்ற மந்தனா, தனது அணுகுமுறை குறித்துப் பேசினார்.

Smriti Mandhana cricket

அவர் பேசியதாவது, "கிரிக்கெட் மீதான அன்பு அளப்பரியது. என் வாழ்வில் கிரிக்கெட்டை விட வேறு எதையும் நான் அவ்வளவு நேசித்ததில்லை. இந்திய ஜெர்சியை அணியும் போது, வேறு எந்த எண்ணமும் மனதில் இருக்காது. நாட்டிற்காக, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, போட்டியை வெல்வதே மனதில் இருக்கும்.

ஜெர்சியை அணியும்போதே உங்கள் பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, களத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கோடி மக்களில் நீங்களும் ஒருவர். இந்த எண்ணமே தீவிர கவனம் செலுத்தி, செயல்படப் போதுமானது" என்று கூறியுள்ளார்.

அதேபோல டீமுக்குள் கருத்து வேறுபாடுகள் வருமா என்பது குறித்த கேள்விக்கு, "நான் இதை பிரச்சனையாகக் கருதுவதில்லை. ஏனெனில், எல்லோரும் நாட்டிற்காக வெல்ல விரும்புகிறோம். ஒவ்வொருவருக்கும் தனிப் பார்வை உண்டு. உண்மையில், இந்த விவாதங்கள் இல்லாமல் களத்தில் வெல்ல முடியாது. கருத்து வேறுபாடுகள் இல்லை என்றால், வெற்றிக்கு ஆர்வம் இல்லை என்றே பொருள். இதுபோன்ற விவாதங்கள் எங்களுக்குள் நடப்பது வழக்கம்தான்" என பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன், ஸ்மிருதி மந்தனாவுக்கு திருமணம நவ. 23 அன்று நடக்க இருந்தது. ஆனால், தந்தை ஸ்ரீனிவாஸுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால், திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் 7 அன்று தனது திருமணத்தை ரத்து செய்வதாக மந்தனா மற்றும் முச்சல் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட்டாக அறிவித்தனர்.

இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் தனது திருமணத்தை ரத்து செய்த பிறகு, மந்தனா பொது வெளியில் தோன்றியது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 21 முதல் இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 சர்வதேசத் தொடருக்கு இந்திய அணியின் துணை கேப்டனாக மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 2 அன்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் இருதரப்புத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+