சமூக விலகல் முக்கியம்தான்.. ஆனால் 14 மணி நேர ஊரடங்கு வைரஸை கட்டுப்படுத்துமா?.. உண்மை நிலவரம் இதோ..
டெல்லி: சமூக விலகல் முக்கியமானதுதான். ஆனால் வைரஸ் பரவலை தடுக்க 14 மணி நேர மக்கள் ஊரடங்கு என்பது போதுமானதல்ல என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸால் இந்தியாவில் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இரண்டரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தால் அதாவது சமுதாய பரவல் நிலைக்கு சென்றுவிட்டால் பின்னர் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என மற்ற நாடுகள் மூலம் தெரிந்து கொண்டோம்.

பிரதமர் உரை
மற்ற நாடுகளை போல் இந்தியாவும் 3ஆவது நிலைக்கு செல்லாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் 29 நிமிடங்கள் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது இந்த வைரஸ் பரவலை தடுக்க இன்றைய தினம் அதாவது மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

வைரல்
அவர் அறிவித்தது முதல் சமூகவலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் வருகின்றன. அதில் கொரோனா வைரஸின் வாழ்நாள் 12 மணி நேரம்தான். எனவே இந்த 14 மணி நேர ஊரடங்கு வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் என ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் #JantaCurfew என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப்களில் வைரலாகி வருகிறது.

பல வழிகள்
ஆனால் உண்மை என்னவெனில் வைரலாகும் செய்தியில் துளிக் கூட உண்மை இல்லை. ஆம். கொரோனா வைரஸால் மேற்பரப்புகளில் 3 நாட்கள் வரை உயிரோடு இருக்க முடியும். நோய் பாதித்தவர்களால் இந்த நோய் இரு வாரங்கள் வரை பரவும். வைரஸ் பரவல் என்பது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பல வழிகளில் பரவி வருகிறது.

வைரஸ்
அதன்படி நேரடியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவது என்பது தொடுதல் மூலம் எளிதில் நடைபெறும். பாதிக்கப்பட்ட நபருக்கு இருமல், தும்மல் இருந்தால் அதிலிருந்து அருகில் உள்ள நபர்களுக்கு பரவும். மறைமுகமாக கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தொட்ட இடத்தை மற்றவர்களும் தொட்டால் அவர்களுக்கும் இந்த வைரஸ் பரவிவிடும்.

2 வாரங்கள்
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மூலம் சராசரியாக 2.6 சதவீதம் பேருக்கு பரவி வருகிறது. ஒருவருக்கு கொரோனா பாதித்து அவருக்கு எந்த அறிகுறியும் தென்படாவிட்டாலும் அவர் உடலில் உள்ள நோய் கிருமிகள் 2 வாரங்களுக்கு அவருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு பரவும்.

14 மணி நேர ஊரடங்கு
கொரோனா வைரஸ் எந்தெந்த பொருட்களின் மீது எத்தனை நாட்கள் உயிர் வாழும் என்பது குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி காற்றில் 3 மணி நேரமும் உலோக பரப்புகளில் 4 மணி நேரமும், கார்டுபோர்டுகளில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களில் 2 முதல் 3 நாட்கள் வரையிலும் உயிரோடு இருக்கும். எனவே 14 மணி நேர ஊரடங்கு மூலம் வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பது தவறான கருத்து. இது புதிதாக யாருக்கும் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications