இந்தியாவில் சூரிய கிரகணம் முடிந்தது.. வானில் நெருப்பு வளையம் போலிருந்த அற்புத நிகழ்வு
டெல்லி: இந்தியாவில் இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கிய நிலையில் சில இடங்களில் பிற்பகல் 3.30 மணிக்கு முடிகிறது.
Recommended Video
கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் காலை 9.58க்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிந்தது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது.

இந்த நிகழ்வு ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரிந்தது. இது இந்த ஆண்டின் முதல் கிரகணம் ஆகும்.

அடுத்த கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இது இந்த ஆண்டின் கடைசி கிரகணமாகும். அது போல் இந்தியாவில் தென்படும் கடைசி கிரகணமும் இதுவாகும். இத்துடன் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்தியாவில் கிரகணம் தெரியும்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிக பிரகாசமாக இருக்கும் என்பதால் அதை வெறும் கண்களால் காணக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட நாடுகளில் காலை 9.15 மணிக்கு கிரகணம் தொடங்கிய நிலையில் இந்தியாவில் குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் காலை 9.58 மணிக்கு சூரிய கிரகணம் முதலில் தென்பட்டது. இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகாரில் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications