சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அறிவிப்பு
டெல்லி: வழக்கமான உடல் நலம் பரிசோதனைகளுக்காக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, நாளை வீடு திரும்புவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சோனியா காந்திக்கு தற்போது 78 வயதாகிறது. காங்கிரஸின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் இருக்கிறார். இவருக்கு பெரியதாக உடல் நல பிரச்சினைகள் ஏதும் இல்லை. வழக்கமான சில மருத்துவ கவனிப்புகள் தேவைப்படுகிறது. அந்த வகையில் வழக்கமான பரிசோதனைக்காக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பரிசோதனை முடிந்த பின்னர் நாளை வீடு திரும்புவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராகுல் காந்தியின் வருகைக்குப் பிறகு சோனியா காந்தி பெரியதாக பொது வெளியில் அரசியல் நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்பதில்லை. காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டி எழுப்புவதற்கான அரசியல் வியூகங்களை வகுப்பதோடு அவர் நிறுத்திக் கொள்கிறார்.
மற்றபடி தேர்தல் பிரச்சாரங்களிலும் களப்பணிகளிலும் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியை பங்கேற்க வைத்திருக்கிறார். அதே நேரம் கட்சிக்குள் இளம் தலைவர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்.











Click it and Unblock the Notifications