தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி அணுகுகிறார்: சர்ச்சையை கிளப்பிய சசிதரூர்
டெல்லி: தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அணுகுவதாக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சசிதரூர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சியில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவின் அனைத்து பகுதிக்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வந்தது.

மோடி அரசு மனப்பான்மை
ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகி வருகிறது. எனவே அதற்கு முடிவு கட்டும் வகையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது என்று நினைக்கிறேன்.

பாஜக அரசு தாக்குதல்
சுதந்திரத்திற்கு பின் உருவாகியுள்ள நாட்டின் கூட்டாட்சி முறைக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக அரசு. கடந்த 5 ஆண்டுகளில் பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தி தேசிய மொழி
மாட்டுக்கறிக்கு தடை, இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி போன்ற பல செயல்களின் மூலம் கலாச்சார ரீதியான தாக்குதலை பாஜக நிகழ்த்தி உள்ளது. குறிப்பாக பாஜக அமைத்த 15வது நிதிக்குழுவின் செயல்திட்ட பரிந்துரைகள் காரணமாக தென்னிந்திய மாநிலங்களின் நிதி ஆதாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளது தடை .

மோடி அரசு புலம்பல்
கேரளாவில் உள்ள நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன். தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த முறை பாஜக, தனது செயல்பாடுகளால் 282 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தமுறை அது சாத்தியம் இல்லை. ஏனெனில் ஐந்து வருடங்கள் பாஜக அரசு வெற்றிகரமாக இயங்கினாலும், வந்துவிடதா என்று அவர்களே புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications