பரபரப்பான சூழலில் இந்தியா வரும் ரணில்? மத்திய அமைச்சர்கள், செயலாளர்களுடன் இலங்கை தூதர் சந்திப்பு!
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய வருகை தொடர்பாக டெல்லியில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
டெல்லி: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு செயலாளர்களுடன் டெல்லியில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட ஆலோசனை நடத்தினார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்ற எம்.பிக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்கே. பொதுவாகவே இலங்கையில் பதவியேற்கும் ஜனாதிபதி அல்லது பிரதமர் இந்தியாவுக்கு முதலில் வருவது வழக்கம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு வருவதில் தாமதம் தொடர்கிறது.
அதேநேரத்தில் இலங்கை அரசாங்கமானது பல்வேறு வகையில் சீனாவுடன் மிக நெருக்கமாகிவிட்டது. சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிக் கொண்டது. இந்த உறவுகளை முறியடிக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன், எல்.முருகன் ஆகியோரும் அடுத்தடுத்து இலங்கை சென்று திரும்பினர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு இந்தியாவிலும் இலங்கையிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை முன்வைத்து பல்வேறு சாதக, பாதக கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை சந்தித்தார் மிலிந்த மொரகொட. மேலும் மத்திய அரசின் நிதி செயலாளர் சோமநாதன், அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா, நிதி ஆயோக் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்தார்.

மேலும் டெல்லியில் பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோத்குமார் மிஸ்ராவையும் மிலிந்த மொரகொட சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள், ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் தொடர்பாக இந்த சந்திப்புகளின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications