ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அரசியல் சாசன அமர்வு முடிந்த பிறகு ஸ்ட்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கோரி மிகப்பெரிய போராட்டம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் ஆபிஸை முற்றுகையிடும் போராட்டம் நடந்த போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அரசு உடனடியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தது.

கடந்த ஐந்து வருடங்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடியே கிடக்கிறது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஒரு புறம் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வு முடிந்த பிறகு ஸ்ட்டெர்லைட் வழக்கின் விசரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications