22 ஆண்டுகளில் கல்வீச்சு நடந்ததில்லை... ஸ்டெர்லைட் ஆலை குறித்து வைகோ பளீச் பேட்டி
Recommended Video

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 29ம் தேதி வரை திறக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஸ்டெர்லைட் திறப்போம் என உரிமையாளர் கூறி வந்த நிலையில் அதற்கு தடை போட்டுள்ளது என்றும் 22 ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலை மீது கல்வீச்சு நடந்ததில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை இன்றே திறக்க உத்தரவிட கோரி வேதாந்தா தொடர்ந்த வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை அமல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி ஆட்சியர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான உரிமத்தை புதுப்பிக்க தமிழக அரசு இரண்டாவது முறையாக மறுப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications