Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து பண்ணிட்டு புதுசா நடத்துங்க.. சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். புதிய தேர்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் மனு அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்கள் முன்பாக அதாவது கடந்த 4 ஆம் தேதியே தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது. மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

neet neet exam national testing agency

ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக, ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து நெகட்டிவ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வில் தவறான விடையளித்தால் ஒரு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும். அதனால், முதலிடம் பிடித்தவர்கள் 720 மதிப்பெண் பெற்றால், அதற்கு அடுத்த நிலையில் வருபவர்கள், ஒரு வினாவுக்கு விடையளிக்காமல் இருந்திருந்தால் 716 மதிப்பெண்களும், தவறான விடையளித்திருந்தால் 715 மதிப்பெண்களும் மட்டும் தான் பெற முடியும்.

ஆனால், இம்முறை முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் 719, 718, 717 என மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்த மதிப்பெண்களை எடுக்க சாத்தியமே இல்லை என்பதால், விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்கும் என மாணவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தில், ஒரு வினாவுக்கு இரு சரியான விடைகள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அந்த இரு விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருந்தாலும் அவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாகவும், மேலும் நேரம் இழப்பால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக, பீகார் மாநிலத்தில், நீட் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மாணவர்கள் சிலரும் பிடிபட்டனர். நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதினர்.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வில் முறைகேடாக மதிப்பெண் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையும், பல இடங்களில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிய தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+