2 ஞாயிற்றுக்கிழமைகள்.. 3 பல்கலைகளில் ரத்த வெள்ளம்.. அப்போது போலீஸ்.. இப்போது முகமூடி நபர்கள்!
Recommended Video
டெல்லி: இந்தியாவில் 3 முக்கிய பல்கலைக்கழகங்களில் 2 ஞாயிற்றுக்கிழமைகளாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வளாகம் முழுவதும் ரத்த ஆறு ஓடுகிறது.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை அமைதியான முறையில் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக மர்மநபர்கள் சிலர் மாணவர்கள் பெயரில் உள்ளே புகுந்து வன்முறையை தூண்டிவிடுகின்றனர். அதன்படி 2 ஞாயிற்றுக்கிழமைகள், 3 பிரதான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவர்கள்
முதல் முறையாக டிசம்பர் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தினுள் போலீஸார் நுழைந்து பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவோர், நூலகங்களில் படிப்போர் என வித்தியாசம் இல்லாமல் மாணவர்களை போலீஸார் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.

வழக்கு பதிவு
அதே வேளையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாக்குதல்
இந்த இரு தாக்குதல் சம்பவங்களிலும் இடது சாரி மாணவர்களும் வலது சாரி மாணவர் அமைப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டனர். இந்த நிலையில் இந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழகம்
கடந்த தாக்குதல்களில் போலீஸார் மாணவர்களை தாக்கினர். ஆனால் நேற்றைய தாக்குதல்களில் வித்தியாசமான முறையில் முகமூடி அணிந்தவர்கள் மாணவர்களை தாக்கினர். நேற்றைய தினம் இரவு 9.30 மணிக்கு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர், இதனால் பல்கலைக்கழகம் முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தது.

மாணவர்கள் மீதான தாக்குதல்
இந்த சூழல் இரவு 10.15 மணிக்கு இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த இரு ஞாயிற்றுக்கிழமைகளில் 3 பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் பல்கலையில் ரத்தம் கிடந்தது. மாணவர்கள் வருங்கால இந்தியா என்கிறோம். ஆனால் நல்ல நிர்வாகிகள், கொள்ளை உருவாக்குபவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நாட்டை ஆள்பவர்களை உருவாக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications