கொரோனாவுக்கு எதிராக... டெல்லியில் 1 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி... ஆய்வு முடிவு சொல்கிறது!
டெல்லி: தலைநகர் டெல்லியில் 2 பேரில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதாவது 1 கோடி டெல்லி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு பெரிய மக்கள் ஒரு நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தால், மீதமுள்ள மக்களையும் தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆட்டிப்படைக்கும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸை தடுக்க தற்போது தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆய்வு முடிவுகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை மதிப்பிடுவதற்காக டெல்லி அரசு பல சுற்று ஆய்வு நடத்தியது. ஐந்தாவது மற்றும் மிகப்பெரிய செரோசர்வே ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 28,000 பேரின் மாதிரி பரிசோதிக்கப்பட்டது. டெல்லியின் ஒவ்வொரு நகராட்சி வார்டிலிருந்தும் 100 மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஜனவரி 10 முதல் ஜனவரி 23 வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

2-ல் ஒருவருக்கு கொரோனா
ஒரு நபரின் உடலில் இருந்து இரத்தத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளதா இல்லையா என்பதை மருத்துவ குழு பரிசோதித்தது. அதாவது டெல்லியில் 2 பேரில் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தனர் என்று ஆய்வு கூறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
2 கோடி கொண்ட டெல்லி மக்கள் தொகையில் சுமார் 50% அதாவது 1 கோடி மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் 60 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்தனர். அதாவது 1 கோடி டெல்லி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர்.

மக்களை காப்பாற்ற முடியும்
டெல்லி மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் அருண் குப்தா மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை 3 பகுதிகளாக விளக்கி உள்ளார்.
1. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ன? என்பதை முதலில் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஒரு பெரிய மக்கள் ஒரு நோய்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருந்தால், அது அந்த நோயைப் பரப்புவதை நிறுத்துகிறது. இதனால் மீதமுள்ள மக்களையும் தொற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும்.
2. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வழிகளில் ஏற்படலாம் - ஒன்று இயற்கையாகவே தொற்றுநோயால் பரவுவது. அல்லது தடுப்பூசி மூலம் ஏற்படுவது. விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் என்ற வகையில் தடுப்பூசி மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி வர வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம்.

பாதிப்பு மேலும் குறையும்
3. தொற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மக்கள் தொகையில் 60 சதவீதத்தில் காணப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மீதமுள்ள மக்களும் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கப்படலாம் என்று நாம் கருதலாம். இந்த காரணத்தினால்தான் டெல்லியில் கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசி போடும் முறை நடந்து வருவதால், டெல்லியில் கொரோனா முழுவதுமாக குறையும் என்று டாக்டர் அருண் குப்தா கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications