பிரதமர் அலுவலக சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.. அனலை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்!
டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தேவை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது.
ஜூன் 13க்கு பிறகு.. ஆரம்பமாகும் புதிய 'அரசியல் ஆட்டம்' - மு.க.ஸ்டாலின் தயாரா?
தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவின் 3-ஆவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமி
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறுகையில் கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இதையே நான் இரு தினங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.
மூன்றாவது அலை
இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் மூன்றாவது அலையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை.
கண்காணிப்பு குழு
அவர்களுக்கு பதிலாக தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே தற்போதைய தேவை என மத்திய அரசை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். கடந்த சில காலமாக பாஜகவில் இருந்து கொண்டே அக்கட்சிக்கு எதிராகவே பேசி வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி.
கையிருப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் தனியார், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அட்மிட் ஆக படுக்கைகள் இல்லை. அத்துடன் மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிக்கு கொடுக்க ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கையிருப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.