கிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தோனி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்த நிலையில் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஐபிஎல்லில் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அந்தந்த மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என தோனி செய்த சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தோனி ஓய்வு
அந்த வகையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே தோனி ஓய்வு பெறுகிறார். மற்ற எதிலிருந்தும் அல்ல. பல்வேறு கஷ்டங்களை எதிர்த்து போராடும் திறமை கொண்டவர். அனைவரும் மெச்சும் அளவிற்கு இந்திய அணிக்கு தலைமையேற்று அந்த அணியை முன்னெடுத்துச் சென்றார்.

2024 மக்களவை தேர்தலில் போட்டி
அது போல் பொது வாழ்க்கையிலும் அவர் ஈடுபட வேண்டும். அந்த தலைமைப் பண்பு பொது வாழ்க்கையிலும் தேவை. வரும் 2024 இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட வேண்டும் என அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னர் கவுதம் காம்பீர் ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார்.

லோக்சபா தேர்தல்
இதையடுத்து அவர் பாஜக சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். அது போல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், நவ்ஜோத் சிங் உள்ளிட்டோர் அரசியலில் குதித்துள்ளார்கள். அது போல் தோனியின் தலைமையும் இந்த நாட்டிற்கு தேவை என பலர் அழைத்து வருகிறார்கள். அவர் இணைவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications