கிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி
டெல்லி: கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் தோனி, வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர் தோனி ஏற்கெனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார்.
இந்த நிலையில் அவர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஐபிஎல்லில் விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அந்தந்த மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என தோனி செய்த சாதனைகளை பட்டியலிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தோனி ஓய்வு
அந்த வகையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், கிரிக்கெட்டிலிருந்து மட்டுமே தோனி ஓய்வு பெறுகிறார். மற்ற எதிலிருந்தும் அல்ல. பல்வேறு கஷ்டங்களை எதிர்த்து போராடும் திறமை கொண்டவர். அனைவரும் மெச்சும் அளவிற்கு இந்திய அணிக்கு தலைமையேற்று அந்த அணியை முன்னெடுத்துச் சென்றார்.

2024 மக்களவை தேர்தலில் போட்டி
அது போல் பொது வாழ்க்கையிலும் அவர் ஈடுபட வேண்டும். அந்த தலைமைப் பண்பு பொது வாழ்க்கையிலும் தேவை. வரும் 2024 இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அவர் நிச்சயம் போட்டியிட வேண்டும் என அரசியலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னர் கவுதம் காம்பீர் ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைந்தார்.

லோக்சபா தேர்தல்
இதையடுத்து அவர் பாஜக சார்பில் கடந்த லோக்சபா தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டார். வெற்றி பெற்றார். அது போல் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், நவ்ஜோத் சிங் உள்ளிட்டோர் அரசியலில் குதித்துள்ளார்கள். அது போல் தோனியின் தலைமையும் இந்த நாட்டிற்கு தேவை என பலர் அழைத்து வருகிறார்கள். அவர் இணைவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications