ஈஷா யோகா மையத்திற்கு எதிரான ஆட்கொணர்வு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
டெல்லி: கோவை ஈஷா மையத்தில் இருக்கும் தனது மகள்களை மீட்டுத் தருமாறு அவர்களது தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா மையத்தில் உள்ள தனது இரு மகள்கள் கீதா (42), லதா (39) ஆகியோரை மீட்டுத் தருமாறு கோவை வடவள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் எஸ்.காமராஜ் என்பவர் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது பதிலளித்த ஈஷா மையம், அந்த இரு பெண்களும் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் இங்கு தங்கியுள்ளார்கள். அவர்களின் தந்தை மீதுதான் அவர்களுக்கு அதிருப்தி என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகளும் ஒப்புக் கொண்டனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில் இரு பெண்களும் 18 வயதை கடந்தவர்கள். அவர்கள் ஆசிரமத்திற்கு வந்த போதும் அவர்கள் மேஜர்தான் (27, 24 வயது).
அவர்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாகவே அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவருமே உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். அது போல் அந்த இருவரில் ஒரு பெண் உச்சநீதிமன்றத்திலும் வீடியோ கால் மூலம் ஆஜராகினார்.
அப்போது அவர் கூறுகையில், நானும் என்னுடைய சகோதரியும் விருப்பத்தின் பேரில்தான் ஈஷாவில் வசித்து வருகிறோம். எனது தந்தைதான் எங்களை 8 ஆண்டுகளாக துன்புறுத்தினார். என் தாயும், என் தந்தைக்கு சளைத்தவர் அல்ல, அவரும் எங்களை கொடுமைப்படுத்தினார் என தெரிவித்துள்ளார். எனவே இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அவர்களுடைய மனு மீது தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications